×

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் 25 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

கோவை: கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 25 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். கோவை காந்திபுரத்தில் மாநகர பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்தது.

இதை அடுத்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள், மாநகர பஸ் நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடை, செல்போன் கடை, செருப்பு கடை உள்பட 25 கடைகளை இடித்து அகற்றினர் . இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: காந்திபுரம் மாநகர பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 25 கடைகள் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு மீண்டும் கடைகள் வைக்காதவாறு கண்காணிக்கப்படும். நடைபாதை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் 25 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Gandhipuram bus station ,Gov. ,Govai ,Gandhipuram ,Gov ,Gandipuram bus station ,
× RELATED சட்டவிரோத குடிநீர் இணைப்பு: கோவை ஆணையர் எச்சரிக்கை